Paristamil Navigation Paristamil advert login

Gard : துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி! - மேலும் இருவர் காயம்!

Gard : துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி! - மேலும் இருவர் காயம்!

29 ஐப்பசி 2023 ஞாயிறு 19:00 | பார்வைகள் : 4585


நேற்று சனிக்கிழமை இரவு Gard நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

Pont-Saint-Esprit நகர்ப்பகுதியில் உள்ள அருந்தகம் ஒன்றின் முன்பாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நல்வர் காயமடைந்தனர். அவர்களில் 24 மற்றும் 25 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 

காயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

நள்ளிரவின் பின்னர் 2 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்