Paristamil Navigation Paristamil advert login

 வாகனக் கடன் பெற்ற கனேடியர்களுக்கு நேர்ந்த நிலை

 வாகனக் கடன் பெற்ற கனேடியர்களுக்கு நேர்ந்த நிலை

30 ஐப்பசி 2023 திங்கள் 02:57 | பார்வைகள் : 6174


கனடிய மத்திய வங்கியின் நிதிக்கொள்கை குறித்த அறிக்கையில் வாகனக் கடன் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் தங்களது வாகனக் கடனை செலுத்த முடியாது தவித்து வருகின்றனர்.

நாட்டில் கடன் செலவுகள் அதிகரித்துள்ளதால் கடன் பெற்றுக்கொண்ட கனடியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் கனடாவில் புதிய மற்றும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கார்களுக்கான குத்தகை மற்றும் கடன் வட்டி உள்ளிட்ட கட்டணத் தொகைகளும் உயர்வடைந்துள்ளது.

இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையல் கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக கூடுதல் தொகையை செலவிட நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்