Paristamil Navigation Paristamil advert login

துனிசிய கடற்பகுதியில் படகு மூழ்கியதில் 4 பேர் பலி! பலர் மாயம்

துனிசிய கடற்பகுதியில் படகு மூழ்கியதில் 4 பேர் பலி!  பலர் மாயம்

7 ஆவணி 2023 திங்கள் 11:29 | பார்வைகள் : 3126


துனிசியாவின் கெர்கென்னாவில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிலிருந்த 4 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்  51 பேரைக் காணவில்லை என தகவலால் தெரிவிக்கின்றன.

கப்பலில் இருந்த அனைத்து குடியேற்றவாசிகளும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கினறன்.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 20 வரை, துனிசிய கடலோர காவல்படை நீரில் மூழ்கிய புலம்பெயர்ந்தோரின் 901 உடல்களை மீட்டதாக ஜூலை மாதம் நாட்டின் உள்துறை அமைச்சர் கூறினார்.

துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் இருந்து இத்தாலிய கடற்கரைக்கு செல்லும் புலம்பெயர்ந்த படகுகள் அடிக்கடி மூழ்கும்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்