Paristamil Navigation Paristamil advert login

பரிசில் நாளை விமான பயிற்சி ஒத்திகை!

பரிசில் நாளை விமான பயிற்சி ஒத்திகை!

23 சித்திரை 2024 செவ்வாய் 18:45 | பார்வைகள் : 1769


நாளை ஏப்ரல் 24 ஆம் திகதி புதன்கிழமை பரிசில் விமான பயிற்சி ஒத்திகை ஒன்று இடம்பெற உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்த விமான ஒத்திகை இடம்பெற உள்ளது.

பிற்பகல் 3.15 மணியில் இருந்து 3.50 மணிக்குள்ளாக பரிசின் Esplanade des Invalides பகுதியில் ஒரு விமானமும், மாலை 6.45 மணி அளவில் Porte de Vanves iல் இருந்து Porte Maillot வரை மற்றொரு விமானமும் பறக்கவிருக்கின்றன.

Esplanade des Invalides பகுதிக்கும் மேல் 15 பரசூட் வீரர்கள் விமானத்தில் இருந்து குதிக்க உள்ளனர். குறித்த நேரத்தில் சில பகுதிகளில் வீதிகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்