பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக Sciences Po வளாகத்துக்கு முன்பாக போராட்டம்! - வன்முறை!
26 சித்திரை 2024 வெள்ளி 16:34 | பார்வைகள் : 1385
பரிசில் உள்ள Sciences Po பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று rue Saint-Guillaume வீதி முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மாணவர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவேளை, இஸ்ரேலுக்கு ஆதரவானவர்களும் அதே பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் குழப்பம் எழுந்தது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கொடிகளை சுமந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிர்ந்தனர்.
அதன்போது இரு தரப்புக்கும் இடையே மோதலும் வெடித்தது.
சட்ட ஒழுங்கு பாதித்ததால், வீதியில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற காவல்துறையினர் தீர்மானித்தனர். அதன்பின்னர் அங்கு காவல்துறையினருக்கும்