Paristamil Navigation Paristamil advert login

இரண்டாம் கட்ட பத்ம விருதுகள் : ஜனாதிபதி வழங்கினார்

இரண்டாம் கட்ட பத்ம விருதுகள் : ஜனாதிபதி வழங்கினார்

9 வைகாசி 2024 வியாழன் 15:16 | பார்வைகள் : 484


விடுபட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகளை இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரபதிமுர்மு வழங்கினார்.

2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு முற்கட்டமாக கடந்த சில மாதங்களுக்கு முன் பத்ம விருதுகளை ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
இதில் சிலரது பெயர்கள் விடுபட்டன. விடுபட்டவர்களுக்கு இன்று நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார்.
மேலும் நடிகை வைஜெயந்திமாலா, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கும் பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.
பாரம்பரிய வள்ளி கும்மி கலைஞர் பத்ரப்பன், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.


ஜன்மபூமி இதழ் முதன்மை ஆசிரியர் குந்தன் வியாஸ், மும்பை சமாச்சார் இதழ் நிர்வாக இயக்குனர் ஹோர்முஸ்ஜி காமா ஆகியோருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்