Paristamil Navigation Paristamil advert login

● ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் ஈழத்தமிழன்!

● ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் ஈழத்தமிழன்!

8 வைகாசி 2024 புதன் 16:51 | பார்வைகள் : 4753


பிரான்சை வந்தடையும் ஒலிம்பிக் தீபத்தை ஈழத்தமிழரான தர்சன் செல்வராஜா ஏந்த உள்ளார். ஆயிரக்கணக்கான அதிஷ்டசாலிகளில் ஒருவராகிறார் தர்சன்.

கிரீசில் இருந்து இன்று புதன்கிழமை ஒலிம்பிக் தீபம் பிரான்சை வந்தடைய உள்ளது. நாடு முழுவதும் உள்ள பல நூறு நகரங்களுக்கு இந்த ஒலிம்பிக் தீபர் 10,000 பேர் வரையானவர்களால் கொண்டுசெல்லப்பட உள்ளது.

அவர்களில் ஒருவராக பிரெஞ்சு வெதுப்பக பணியாளர் தர்சன் செல்வராஜா தெரிவாகியுள்ளார்.

பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறுகிற மிகச் சுவையான பாண் போட்டியில், நடப்பு ஆண்டில் வெற்றியாளராக தர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தோடு எலிசே மாளிகைக்கு அவரே நடப்பு ஆண்டு முழுவதும் பாண் விநியோகம் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்