Paristamil Navigation Paristamil advert login

கண்ணீர்..

கண்ணீர்..

9 மார்கழி 2011 வெள்ளி 21:10 | பார்வைகள் : 10215


 

மனித மனங்களின்
தாரக மந்திரம்
கண்ணீர்..

கடல் என நீண்டு செல்லும்
நினைவலைகளில்
சிக்கித் தவிக்கும் உள்ளங்களின்
உண்மையான நட்பு
கண்ணீர்...

வலிகளை மறக்க செய்ய,
கடவுளின் அன்பு பரிசு,
கண்களை சுத்தப்படுத்தி
இதயங்களை இதமாக்கி
பாவங்களின் மன்னிப்பாய்
கண்ணீர்...

இரவின் மடியில்
தனிமையின் பிடியில்
படுக்கையறையில்
தலையணையுடன்
சண்டையிட்டு - இளம்
பெண்கள் பேசும்
மெளன பாஷை
கண்ணீர்..

பிறப்பிலும் கண்ணீர்
மனித இறப்பிலும் கண்ணீர்
நட்பிலும் கண்ணீர்
காதலிலும் கண்ணீர்
வலியிலும் கண்ணீர்
சந்தோசத்திலும் கண்ணீர்
இழப்பிலும் கண்ணீர்
ஒன்றை பெறுவதிலும் கண்ணீர்
கண்ணீர்!!!
இன்றைய மனித வாழ்வில்
உயிர் காவியம்....

http://pirashathas.blogspot.com/

வர்த்தக‌ விளம்பரங்கள்