Paristamil Navigation Paristamil advert login

Aulnay-sous-Bois : நபர் ஒருவரைக் கடத்தி பணம் பறிந்த இருவர் கைது!!

Aulnay-sous-Bois :  நபர் ஒருவரைக் கடத்தி பணம் பறிந்த இருவர் கைது!!

22 சித்திரை 2024 திங்கள் 13:18 | பார்வைகள் : 2432


30 வயதுடைய ஒருவரைக் கடத்தி, அவரை தாக்கி பணம் பறிந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Villiers-le-Bel (Val-d'Oise) நகரில் வசிக்கும் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அவில் கடத்தப்பட்டுள்ளார். அவரைக் கடத்தியவர்கள் கடத்தியவரின் மனைவிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு எடுத்து €10,000 யூரோக்கள் பணம் கோரியுள்ளார். 

அவருடைய மனைவி அவர்களுக்கு பணம் வழங்க மறுத்ததோடு, காவல்துறையினரையும் அழைத்து தகவலைத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த Aulnay-sous-Bois-Sevran நகர காவல்துறையினர், சில நிமிடங்களிலேயே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.

கடத்தல்காரர்கள் Renault Clio மகிழுந்து ஒன்றை கடத்தலுக்காக பயன்படுத்தியுள்ளனர். காலை 8 மணி அளவில் மகிழுந்தை கண்டுபிடித்து அவர்களை கைது செய்ததோடு, கடத்தப்பட்ட நபரையும் மீட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்