Paristamil Navigation Paristamil advert login

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து விபத்து - 30 பேர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து விபத்து - 30 பேர் காயம்

19 ஆடி 2024 வெள்ளி 14:11 | பார்வைகள் : 2861


யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் விபத்துக்குள்ளானது.

 
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து இந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
 
இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகச் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் சூரியன் செய்திகளுக்குத் தெரிவித்தனர். 
 
பாதிக்கப்பட்டவர்கள் மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். 
 

எழுத்துரு விளம்பரங்கள்