Paristamil Navigation Paristamil advert login

பத்து நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள்!

பத்து நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள்!

11 கார்த்திகை 2023 சனி 17:03 | பார்வைகள் : 3882


சியாரா புயலினால் பாதிக்கப்பட்டு மின் இணைப்பை இழந்த மக்கள் பலர், இதுவரை மின்சாரத்தை மீள பெறவில்லை எனவும், பத்து நாட்களாக இருளில் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Brittany மாவட்டத்தில் 19,900 வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்கப்பட்டுள்ளது. Finistère நகரில் 14,700 வீடுகளும், Côtes-d'Armor wஅகரில் 3,300 வீடுகளும், Morbihan நகரில் 1,900 வீடுகளும் மின் இணைப்பை இழந்துள்ளன.

மின்சாரத்தை மீண்டும் வழங்குவதற்குரிய பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அடுத்து வரும் சில நாட்களில் மின் இணைப்பு கிடைக்கும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மின் இணைப்பை சரிசெய்வதில் பெரும் சவால்கள் நிறைந்துள்ளதாகவு, 2,400 ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்