Paristamil Navigation Paristamil advert login

திணறும் பிக்பாஸ் போட்டியாளர்கள் காரணம் என்ன?

 திணறும் பிக்பாஸ் போட்டியாளர்கள் காரணம் என்ன?

14 கார்த்திகை 2023 செவ்வாய் 07:06 | பார்வைகள் : 2223


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று திடீரென பெட்ரூம் கதவை பிக் பாஸ் முடி விட்டதாக ப்ரோமோ வீடியோவில் காண்பிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 43 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 44 வது நாளாக நடைபெறுகிறது. இன்றைய முதல் ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அந்த டாஸ்க்கை நிக்சன், பூர்ணிமா, மாயா, மற்றும் பிராவோ ஆகியோர் விளையாடுகின்றனர்

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோல்வி அடைந்தால் பெட்ரூம் கதவு மூடப்படும் என பிக் பாஸ் அறிவித்துள்ள நிலையில் நிக்சன் மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் தோல்வி அடைகின்றனர். இதனையடுத்து உடனடியாக பெட்ரூம் கதவை மூட பிக் பாஸ் உத்தரவிடுகிறார்.

இதனால் போட்டியாளர்கள் பெட்டி படுக்கையுடன் லிவிங் ஏரியாவில் வெளியே வருகின்றனர். ஸ்மால் ஹவுஸ் பெட்ரூம் மட்டுமே திறந்திருக்கும் என்பதால் இத்தனை போட்டியாளர்கள் அந்த சின்ன வீட்டில் எப்படி இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க பிக் பாஸ் குழுவினர் பல்வேறு ஐடியாக்களை செயல்படுத்தி வரும் நிலையில் இந்த வாரம் பெட்ரூம் கதவு மூடப்பட்டிருப்பதால் பிக் பாஸ் போட்டியாளர்கள் என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்