இலங்கையில் உணரப்பட்ட நிலநடுக்கம்

14 கார்த்திகை 2023 செவ்வாய் 07:59 | பார்வைகள் : 5017
இலங்கையின் காலிக்கு தெற்கே இந்திய ஆழ்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இலங்கையிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது