Paristamil Navigation Paristamil advert login

காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற மகிழுந்து விபத்தில் சிக்கியது! - ஒருவர் பலி, இருவர் காயம்..!!

காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற மகிழுந்து விபத்தில் சிக்கியது! - ஒருவர் பலி, இருவர் காயம்..!!

14 கார்த்திகை 2023 செவ்வாய் 12:32 | பார்வைகள் : 4568


காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி தப்பிச் சென்ற மகிழுந்து ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது. 

நேற்று இரவு வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த BAC காவல்துறையினர் 11.30 மணி அளவில் Porte de Pantin மற்றும்  Porte des Lilas பகுதிகளுக்கிடையே மகிழுந்து ஒன்று அதிவேகமாக பயணிப்பதை பார்த்துள்ளனர். மகிழுந்தில் நால்வர் இருந்த நிலையில், அவர்கள் மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். 

ஆனால் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி அவர்கள் வேகமாக பயணித்துள்ளனர். 

Place de la Porte de Bagnolet (20 ஆம் வட்டாரம்) பகுதியில் பயணித்த குறித்த மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகிழுந்தில் பணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பசம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்