Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்லும் அந்த 3 போட்டியாளர்கள் யார்?

மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்லும் அந்த 3 போட்டியாளர்கள் யார்?

20 கார்த்திகை 2023 திங்கள் 12:31 | பார்வைகள் : 2048


பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மூன்று போட்டியாளர்கள் ரீஎண்ட்ரியாக போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மூன்று போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. அவர்கள் விஜய் வர்மா, அனன்யா ராவ் மற்றும் வினுஷா என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் ரிஎண்ட்ரியாகும் மூன்று போட்டியாளர்களுக்கும் ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களுக்கும் டாஸ்க் நடக்கும் என்றும் இந்த டாஸ்க்கில் 3 போட்டியாளர்கள் வென்று விட்டால் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வார்கள் என்றும் அதற்கு பதிலாக ஏற்கனவே இருக்கும் 14 போட்டியாளர்களில் சிலர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் அறிவித்தார்.

எனவே உள்ளே வரும் 3 போட்டியாளர்கள் வலிமையான போட்டியாளர்களாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாமினேஷன் செய்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மட்டுமே ரிஎண்ட்ரியில் வருவார்கள் என்று பிக் பாஸ் கூறியதால் அதில் பிரதீப் இருக்க வாய்ப்பு இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு ரீ என்ட்ரி ஆவது விஜய் வர்மா, அனன்யா ராவ் மற்றும் வினுஷா என்று தெரிகிறது. விஜய் வர்மா ஏற்கனவே விஷ்ணுவுடன் மோதியுள்ளார் என்பதும் நிக்சன் தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் வர்ணித்ததற்கு வினுஷா பதிலடி கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே அனன்யாராவ் வெளியேறிவிட்டதால் அவரது திறமை வெளியே தெரியவில்லை. இதனை அடுத்து தற்போது அவர் ரீஎண்ட்ரி ஆவதால் தன்னுடைய திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்