Paristamil Navigation Paristamil advert login

நீதிமன்றம் சென்ற மன்சூர் அலிகான்.. நடந்தது என்ன ?

நீதிமன்றம் சென்ற மன்சூர் அலிகான்.. நடந்தது என்ன ?

23 கார்த்திகை 2023 வியாழன் 09:10 | பார்வைகள் : 5611


நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

நேற்று த்ரிஷா வீட்டுக்கு காவல்துறை அதிகாரிகள் சென்று இது குறித்து விசாரணை செய்ததாகவும் இன்று மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

இந்த நிலையில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் முன் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ள நிலையில், முன் ஜாமீன் கோரி மனு கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், இன்றைய விசாரணைக்கு பின் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

5 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்