Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... 128 பேர் பலி

 நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... 128 பேர் பலி

4 கார்த்திகை 2023 சனி 09:28 | பார்வைகள் : 2493


 நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

128 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.

 நிலடுக்கம் முதற்கட்ட அளவில் 5.6 ரிக்டர் பதிவானதாகவும், 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்பின் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் நிலநடுக்கம் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி தேசிய மையம், நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து 250 மைல் தூரத்தில் உள்ள ஜாஜர்கோட், நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்