Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ்7: இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இருவர் காரணம் யார்?

பிக் பாஸ்7: இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இருவர் காரணம் யார்?

12 மார்கழி 2023 செவ்வாய் 14:20 | பார்வைகள் : 1254


பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதி இல்லை என்று சொல்லி இரண்டு போட்டியாளர்களை மற்ற ஹவுஸ் மேட்ஸ் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பிக் பாஸ்7 நிகழ்ச்சி ஐம்பது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக எலிமினேஷன் இல்லை எனஅறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்குமோ என்ற அச்சமும் போட்டியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டியாளர்களுக்கு சரியாக நேரம் கணித்து சொல்ல வேண்டும் என பல டாஸ்க் நடக்கிறது. மேலும், ஒவ்வொரு சீசனிலும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கும் கொடுக்கப்பட்டு நேரடியாக ஒருவர் இறுதிப் போட்டிக்கும் செல்லலாம்.

அந்த வகையில் இந்த வாரம், டிக்கெட் டூ ஃபினாலேக்கு செல்ல தகுதியில்லாத இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுத்து சொல்ல சொல்கிறார் பிக் பாஸ். அதன்படி, பெரும்பாலான போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் விஜய் இருவரையும் டிக்கெட் டூ ஃபினாலேவுக்கு தகுதியில்லாதவர்களாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இதில் அர்ச்சனா பெயரை தினேஷூம் சொல்லி இருக்கிறார்.

இதனால், அர்ச்சனா கோபமடைந்து விசித்ராவிடம் புலம்பி வருகிறார். ’அண்ணா என கூப்பிட்டேன். ஆனால், கூடவே இருந்துவிட்டு இவர் இப்படி பண்ணிருக்கறது கடுப்பா இருக்கு’ எனக் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்