Paristamil Navigation Paristamil advert login

யாழில் ஹெரோயினுக்காக கோயிலில் தங்க காசுகளை கொள்ளையிட்ட பூசாரி

யாழில் ஹெரோயினுக்காக கோயிலில் தங்க காசுகளை கொள்ளையிட்ட பூசாரி

14 மார்கழி 2023 வியாழன் 05:48 | பார்வைகள் : 1342


ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்த கோயிலில் இருந்த 5 தங்க காசுகளை கொள்ளையிட்டு, அடகு கடையில் அடமானம் வைத்த யாழ்ப்பாணம் பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியை பொலிஸார் நேற்று (13) கைது செய்துள்ளனர்.

பூசாரி தங்க காசுகளை அடகு வைத்தமைக்கான பற்றுச்சீட்டையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். போதைப் பொருளுக்கு அடிமையான இந்த பூசாரி, கைது செய்யப்படும் போதும் போதைப் பொருளை பயன்படுத்தி இருந்த காரணத்தினால், அவர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு கோயில் பூசாரி ஒருவர் கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் இந்த வாரம் நடந்தது.

பொலிஸார் அந்த பூசாரியை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்ட கோயில் பூசாரி இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்