இலங்கையில் யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
19 மார்கழி 2023 செவ்வாய் 15:16 | பார்வைகள் : 1148
இலங்கையில் உள்ள யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
65 இடங்களை மையப்படுத்தி அந்த திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, நாடு பூராகவும் 3,700 யாசகர்கள் உள்ளதாக அந்த அறிக்கை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 1,600 யாசகர்கள் உள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.