Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டு ஆசை காட்டி ஏமாற்றப்படும் மக்கள் - யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி

வெளிநாட்டு ஆசை காட்டி ஏமாற்றப்படும் மக்கள் - யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி

23 மார்கழி 2023 சனி 09:48 | பார்வைகள் : 2235


வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தாக கூறி, கடந்த இரு வாரத்தில், யாழில் இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை போலி முகவர்கள் மோசடி செய்துள்ளனர் என பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடந்த இரண்டு வார கால பகுதிக்குள் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றின் அடிப்படையில் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பியே பணத்தினை இழந்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விளம்பரங்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமாற வேண்டாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்