Paristamil Navigation Paristamil advert login

வெளிநாடு ஒன்றில் இலங்கை பெண்ணின் அதிரிச்சி செயல்!

வெளிநாடு ஒன்றில் இலங்கை பெண்ணின் அதிரிச்சி செயல்!

4 மார்கழி 2023 திங்கள் 07:21 | பார்வைகள் : 1856


மாலைதீவில் பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் பிறந்த சிசுவைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பெண் இரகசியமாக சிசுவை பிரசவித்து, அதனை ஒரு பைக்குள் இட்டு குப்பை கிடங்கில் போட்டு விட்டு சென்றுள்ளார்.

சிசுவையை குப்பை கிடங்கில் இருந்து மீட்டு பரிசோதித்த போது சிசு உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

பொலிஸார் விரைவான நடவடிக்கை எடுத்து, விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றபோது குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மாலைதீவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்