Paristamil Navigation Paristamil advert login

விசாரணைகளில் திருப்பம் - மகன் குறித்து முன்னதாகவே காவல்துறையினரிடம் தெரிவித்த பயங்கரவாதியின் தாய்!

விசாரணைகளில் திருப்பம் - மகன் குறித்து முன்னதாகவே காவல்துறையினரிடம் தெரிவித்த பயங்கரவாதியின் தாய்!

4 மார்கழி 2023 திங்கள் 09:00 | பார்வைகள் : 4310


பரிசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, பயங்கரவாதியின் தாக்குதல் நோக்கம் குறித்து முன்னதாகவே அவனது தாய் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததாக அறிய முடிகிறது.

பயங்கரவாதி Armand R இன் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவரது தாய், கடந்த ஒக்டோபரின் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதம் கொண்ட நபர்களைக் கண்காணிக்கும் பட்டியலில் ( fiche S) பயங்கரவாதி Armand R இன் பெயர் பதியப்பட்டிருந்தது. அதையடுத்து அவர் தம்மைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு இருந்துள்ளார். பெரும்பாலான நேரத்தை அறைக்குள்ளேயே செலவிட்டுள்ளார். அதையடுத்து அவரது நடவடிக்கை குறித்து அவரது தாய் கவலையுற்றதாகவும், காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததாகவும் அறிய முடிகிறது.

பின்னார் காவல்துறையினர் Armand R இனை மருத்துவர்களிடம் மருத்துவ சோதனைக்குட்படுத்தியதாகவும், அதில் குறிப்பிடும் படியான இடையூறுகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டதால், இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிகமாக அதில் மேற்கொண்டு கவனம் செலுத்தவில்லை. அதையடுத்தே மேற்படி தாக்குதல் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்