Paristamil Navigation Paristamil advert login

யாழில் வீடொன்றில் தனிமையில் இருந்த யுவதிக்கு நேர்ந்த கதி

யாழில் வீடொன்றில் தனிமையில் இருந்த யுவதிக்கு நேர்ந்த கதி

10 மார்கழி 2023 ஞாயிறு 07:44 | பார்வைகள் : 1573


 
யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து , பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி அட்டையை (ATM) திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் , வீட்டில் தனிமையில் இருந்த யுவதியை மிரட்டி , அவரிடம் இருந்த வங்கி அட்டையை திருடி சென்றுள்ளார்.

அது தொடர்பில் யுவதியினால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிராகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , திருடப்பட்ட வங்கி அட்டையை பயன்படுத்தி , பல்பொருள் அங்காடி ஒன்றில் இளைஞன் பொருட்களை கொள்வனவு செய்ததை அறிந்து , விசாரணைகளை முன்னெடுத்து இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்