Paristamil Navigation Paristamil advert login

யாழில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை

யாழில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை

9 தை 2024 செவ்வாய் 02:38 | பார்வைகள் : 1121


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

அதன் போது , மத்திய பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற பேருந்துகள் மற்றும் அங்கிருந்து புறப்பட தயார் ஆனா பேருந்துகளை பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையிட்டனர். 

அத்துடன் பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

அதேவேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் எழுதுமட்டு வாழ் பகுதியில் கொடிகாம பொலிஸார் பேருந்துகளை வழிமறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்