Paristamil Navigation Paristamil advert login

Essonne : வீட்டுக்குள் நுழைந்து கத்திக் குத்து! - தம்பதியினர் காயம்!!

Essonne : வீட்டுக்குள் நுழைந்து கத்திக் குத்து! - தம்பதியினர் காயம்!!

31 மார்கழி 2023 ஞாயிறு 16:22 | பார்வைகள் : 2187


வீடொன்றுக்குள் நுழைந்த இளைஞன் ஒருவன், தம்பதியினர் இருவரை கத்தியால் குத்தியுள்ளார். 

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி அளவில் இச்சம்பவம் Villebon-sur-Yvette (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள வீடொன்றுக்குள் நுழைந்த 20 வயதுடைய ஒருவர், உறங்கிக்கொண்டிருந்த 30 வயதுடைய தம்பதிகள் இருவரை கத்தியால் தாக்கியுள்ளார். 

ஒன்பது மாத குழந்தைகளின் பெற்றோர்களான அவர்கள், குழந்தையின் கண் முன்னே தாக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய தாக்குதலாளி தேடப்பட்டு வருகிறார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்