Paristamil Navigation Paristamil advert login

5,009 முறை உருமாறிய ஒமைக்ரான் கொரோனா!

5,009 முறை உருமாறிய ஒமைக்ரான் கொரோனா!

9 மாசி 2024 வெள்ளி 02:08 | பார்வைகள் : 1365


கொரோனா மூன்றாம் அலையின் போது பரவிய, 'ஒமைக்ரான்' வைரஸ் வகையில், 5,009 உருமாற்றங்கள் அடைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று, தற்போது முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும், பருவகால பாதிப்பாக, அவ்வப்போது கொரோனா தொற்று அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் ஆறு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை, கொரோனா மூன்றாம் அலையின் போது பரவிய, ஒமைக்ரான் பி 1.1 மற்றும் அதன் உருமாற்றங்கள் குறித்த மரபணு ஆய்வுகளை மேற்கொண்டது. 2021 டிசம்பர் முதல் 2023 மார்ச் வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் குறித்த ஆராய்ச்சி கட்டுரை, 'ஜர்னல் ஆப் மெடிக்கல் வைராலஜி' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பாவது:

ஆய்வில் மொத்தம் 11,526 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 10,663 மாதிரிகள் ஒமைக்ரான் வகையை சார்ந்தவை. உருமாற்றமடைய சாத்தியம் இருந்த, 1,688 மாதிரிகள் மரபணு சோதனைக்கும், 150 மாதிரிகள் ஆழ்ந்த சோதனைக்கும் உட்படுத்தப்பட்டன.

ஒமைக்ரானின் உட்பிரிவான பி.ஏ.1 மற்றும் பி.ஏ.2.75 வகைகள், மக்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்த காரணமாக அமைந்தன. அதேபோல், பி.ஏ.1 - பி.ஏ.2 வகை பாதிப்புகள், உயிரிழப்புக்கு வழிவகுத்தன. அதை தொடர்ந்து, கொரோனா வைரஸின் வெளிப்புறத்தில் ஏற்பட்ட உருமாற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆழ்ந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட, 150 சளி மாதிரிகளில், 5,009 உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்