இலங்கையில் விஜய்யை சந்திக்க ஆசைப்படும் முன்னாள் ஜனாதிபதி ?

9 மாசி 2024 வெள்ளி 05:43 | பார்வைகள் : 4087
The Greatest Of All Time படத்தின் 50 சத வீத படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இலங்கையில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக விரைவில் படக்குழு இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விஜய் படப்பிடிப்புக்காக இலங்கை வந்தால் அவரை சந்திக்க இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்க்ஷவும் அவர் குடும்பத்தினரும் ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், ராஜபக்க்ஷ குடும்பத்தினரை சந்தித்தால் அது அவருக்கு பின்னடைவாக அமையும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.