Paristamil Navigation Paristamil advert login

காஸாவின் தெற்கு பகுதிகளில் தொடர் தாக்குதல் மேற்கொண்டுவரும் இஸ்ரேல்! - யுத்த நிறுத்தம் கோரும் பிரான்ஸ்!

காஸாவின் தெற்கு பகுதிகளில் தொடர் தாக்குதல் மேற்கொண்டுவரும் இஸ்ரேல்! - யுத்த நிறுத்தம் கோரும் பிரான்ஸ்!

11 மாசி 2024 ஞாயிறு 17:38 | பார்வைகள் : 2314


காஸாவின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் இடைவிடாது குண்டுமழை பொழிந்து வருகிறது. பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது. இந்த தாக்குதலை உடனே கைவிடும் படி பிரான்ஸ் இஸ்ரேலிடம் கோரியுள்ளது.

Rafah பகுதியில் இஸ்ரேலின் இராணுவம் நேற்றில் இருந்து தாக்குதல் மேற்கொண்டுவருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ”இது ஒரு பேரழிவு. மனிதாபிமானமற்ற சூழ்நிலையை உருவாக்குவதை நியாப்படுத்த முடியாது!” என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

”பேரழிவை தவிர்க்கும் வகையில், யுத்தத்தை நிறுத்துவதற்கான எங்கள் அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம்!” எனவும் அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்