Paristamil Navigation Paristamil advert login

இலங்கை இளம் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்!

இலங்கை இளம் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்!

16 மாசி 2024 வெள்ளி 13:14 | பார்வைகள் : 1872


இளம் மனைவியை தாக்கி கொலை செய்த கணவர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் மிஹிந்தலை பிரதேசத்தை சேர்ந்த ஆர் . நிமேஷா மதுஷானி என்ற 23 வயதுடைய பெண்ணாவார்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்பில் 32 வயதான கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கணவன் - மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட  வாக்குவாதம் எல்லை மீறியதில் கணவன் தனது மனைவியின் தலையில் ஆயுதத்தால் தாக்கியதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்