Paristamil Navigation Paristamil advert login

3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் வழங்க உறுதி! - பிரான்ஸ் - உக்ரேன் ஜனாதிபதிகள் சந்திப்பு!

3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் வழங்க உறுதி! - பிரான்ஸ் - உக்ரேன் ஜனாதிபதிகள் சந்திப்பு!

17 மாசி 2024 சனி 08:12 | பார்வைகள் : 2366


நேற்று பெப்ரவரி 16, வெள்ளிகிழமை உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelensky பரிசுக்கு வருகை தந்திருந்தார்.

இரஷ்யாவுடனான யுத்தம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை அண்மித்துள்ள நிலையில், பிரான்ஸ்-உக்ரேன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட அவர் பிரான்சுக்கு வருகை தந்திருந்தார். இந்த ஒப்பந்தமானது உக்ரேனின் வசிக்கும் மக்களுக்கும் மற்றும் உக்ரேனின் இராணுவத்துக்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கான ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தில் 2024 ஆம் ஆண்டில் 3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்குவதற்கு பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. முன்னதாக 2022 ஆம் ஆண்டில் 1.7 பில்லியன் யூரோக்கள், 2023 ஆம் ஆண்டில் 2.1 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்