Paristamil Navigation Paristamil advert login

சிவப்பு நிறத்தில் ஒளிரும் கொழும்பு தாமரை கோபுரம்!

சிவப்பு நிறத்தில் ஒளிரும் கொழும்பு தாமரை கோபுரம்!

21 மாசி 2024 புதன் 07:47 | பார்வைகள் : 1655


கொழும்பு தாமரை கோபுரம் பெப்ரவரி 22ஆம் திகதியன்று சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு தாமரை கோபுரம் முகாமைத்துவ நிறுவனம் (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது.

உலக மூளையழற்சி தினமான பெப்ரவரி 22ஆம் திகதியன்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இவ்வாறு ஒளிரவிடப்படவுள்ளது. 

இந்த பேரழிவு தரும் நரம்பியல் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த என்செபாலிடிஸ் இன்டர்நேஷனலின் தற்போதைய பணியின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகின்றது.

  கொழும்பு தாமரை கோபுரம் உலகெங்கிலும் உள்ள பல சர்வதேச அடையாளங்களுடன் இணைந்து இந்த இயக்கத்திற்கு ஆதரவளிக்கும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்