Paristamil Navigation Paristamil advert login

கப்பல் மோதி விபத்து -   இருவர் பலி

கப்பல் மோதி விபத்து -   இருவர் பலி

22 மாசி 2024 வியாழன் 12:53 | பார்வைகள் : 2056


சீனாவின் குவாங்சோ (Guangzhou) நகருக்கு அருகே கொள்கலன் கப்பல் பாலம் மீது மோதியதில் 2 பேர் உயிழந்ததுடன் மூவரைக் காணமல் போய் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து இன்று 2024.02.22. Pearl ஆற்றில் உள்ள பாலத்தின் மீது கப்பல் மோதியபோது பாலத்தின் ஒரு பகுதி நொறுங்கித் தண்ணீருக்குள் விழுந்ததுள்ளது.  

இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் காயமடைந்தார். 

மேலும், 3 பேர் காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் நடைபெறுகிறது.

இந்த மோதலால், பாலத்தின் ஒரு பகுதி உடைந்தது. பாலத்தின் உடைந்த பகுதிக்கு அருகே அந்த கப்பல் கீழே சிக்கிக் கொண்டது.

விபத்தில் சிக்கிய அந்த கப்பலில் சரக்கு ஏதும் கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக, அந்த கப்பலின் கேப்டன் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கப்பலை பாலத்தின் கீழிருந்து வெளியே மீட்கும் பணி மும்முரப்படுத்துள்ளது. 

இதனால், விபத்து நடந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்