Paristamil Navigation Paristamil advert login

33 வருடங்களின் பின்னர் வலி.வடக்கு ஆலயங்களில் நடந்த வழிப்பாடுகள்

33 வருடங்களின் பின்னர் வலி.வடக்கு ஆலயங்களில் நடந்த வழிப்பாடுகள்

23 மாசி 2024 வெள்ளி 10:49 | பார்வைகள் : 1350


 யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள்ள 07 ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 07 ஆலயங்களுக்கு சென்று வழிபடவே இராணுவத்தினர் இன்று அனுமதித்துள்ளனர்.

இதன்படி, ஆலய வழிபாடுகளுக்கு செல்ல விரும்புவோர் தமது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பனவற்றை ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விபரங்களை நிர்வாகத்தினர் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உயர் பாதுகாப்பு வலயத்தினுள் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இராணுவத்தினரே மேற்கொண்டனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்