Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் : சீமான் பேட்டி

ஜனாதிபதி மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் : சீமான் பேட்டி

29 தை 2024 திங்கள் 01:03 | பார்வைகள் : 1187


ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நேரடியாக ஓட்டளிக்கும் முறையை கொண்டு வர வேண்டும்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

இது குறித்து, தூத்துக்குடியில் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விஜய் அரசியலுக்கு வருவார். 2026ல் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவார்.

வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கே வரிசையில் நின்று ஓட்டளிக்கும் மக்கள், ஜனாதிபதியை தேர்வு செய்ய ஓட்டளிக்க மாட்டார்களா?. ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நேரடியாக ஓட்டளிக்கும் முறையை கொண்டு வர வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மட்டும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்டால் போதுமா, இது ஜனநாயக முறையா?. 

தமிழகம் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளேன். பிப்ரவரி மாதம் இறுதிக்குள் நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்து விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்