Paristamil Navigation Paristamil advert login

மம்தா இன்னும் இண்டியா கூட்டணியில் இருக்கிறார்: ராகுல்

மம்தா இன்னும் இண்டியா கூட்டணியில் இருக்கிறார்: ராகுல்

6 மாசி 2024 செவ்வாய் 17:13 | பார்வைகள் : 1483


மம்தா பானர்ஜி 'இண்டியா' கூட்டணியில் மிகவும் முக்கியமானவர். அவர் இன்னும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன் என அறிவித்திருந்தார். இதனால் இரு கட்சிகளும் அங்கம் வகித்துள்ள இண்டியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. 

மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திரிணமுல் காங்., போட்டியிட்டால், கூட்டணி கட்சிகளே அவர்களை எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மம்தா இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடுவதாக செய்தி வெளியானது.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மம்தா பானர்ஜி 'இண்டியா' கூட்டணியில் மிகவும் முக்கியமானவர். அவர் இன்னும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். அவர் மட்டுமல்லாமல் கூட்டணி அமைத்ததில் இருந்த பெரும்பாலானோர் இன்னும் அங்கம் வகிக்கின்றனர். 

நிதீஷ்குமார் விலகி பா.ஜ., உடன் கூட்டணி அமைத்துவிட்டார். எங்களிடம் இருந்து விலகி அவர்களுடன் இணைந்ததற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். அவர் சென்றாலும், பீஹாரில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இண்டியா கூட்டணியாக போட்டியிடுவோம். எனவே, பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இல்லை என சொல்வதை ஏற்கமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்