Paristamil Navigation Paristamil advert login

'தக்லைஃப்' படத்தில் மணிரத்னத்தின் அதிரடி திட்டம்..!

'தக்லைஃப்' படத்தில் மணிரத்னத்தின் அதிரடி திட்டம்..!

12 பங்குனி 2024 செவ்வாய் 07:18 | பார்வைகள் : 6338


கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் சமீபத்தில் விலகியதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கேரக்டரில் நடிக்க மாஸ் நடிகரை மணிரத்னம் தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

துல்கர் சல்மான் நடிக்க இருந்த கேரக்டருக்கு நடிக்க ஒரு நடிகரை மணிரத்னம் தேர்வு செய்யும் பணியில் இருக்கும் நிலையில் தற்போது அவர் சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் இதற்கு சிம்பு அநேகமாக ஒப்புக் கொள்வார் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்த ’செக்கச்சிவந்த வானம்’ படம் சிம்புவுக்கு மிகப்பெரிய நல்ல பெயரை பெற்று தந்த நிலையில். மீண்டும் அவருக்கு மணிரத்னம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ண மாட்டார் என்ற கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி முதல் முறையாக கமல்ஹாசன் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அவர் கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துல்கர் சல்மான் இந்த படத்தில் கலெக்டர் வேடத்தில் நடிக்க இருந்த நிலையில் தற்போது சிம்பு அந்த கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், கலெக்டர் வேடம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் இந்த கேரக்டரை சிறப்பாக செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு இணைய இருக்கும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிக்கும் ’எஸ்டிஆர் 48’ படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கும் நிலையில் மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் ’தக்லைஃப்’ படத்திலும் அவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்