Paristamil Navigation Paristamil advert login

மலேசியாவில் இலங்கையர்கள் உட்பட 158 பேர் அதிரடியாக கைது

மலேசியாவில் இலங்கையர்கள் உட்பட 158 பேர் அதிரடியாக கைது

17 பங்குனி 2024 ஞாயிறு 07:14 | பார்வைகள் : 6221


மலேசியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது செல்லுபடியாகும் விசா இல்லாமல் மலேசியாவில் தங்கியிருந்த 158 சட்டவிரோத குடியேற்றவாசிகளில் இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bercham அடுக்குமாடி குடியிருப்பை ஆய்வு செய்ததில் 358 குடியேற்றவாசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்களில் 158 பேருக்கு மலேசியாவில் தங்குவதற்கு செல்லுபடியாகும் விசாக்கள் இல்லை என்றும் குடிவரவு இயக்குனர் Meor Hezbollah Meor Abd Malik தெரிவித்தார்.

 அதன் காரணமாகவே அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்டவர்களில் 83 ஆண்களும், 54 பெண்களும், 8 சிறுவர்களும், 9 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட 3 சிறுமிகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 அவர்கள் அனைவரும் இந்தோனேசியா, நேபாளம், மியான்மர், பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். 

வர்த்தக‌ விளம்பரங்கள்