Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் நகரசபை - மின்சாரவாரியத்துடன் €3 பில்லியன் பெறுமதியுள்ள ஒப்பந்தம்!

பரிஸ் நகரசபை - மின்சாரவாரியத்துடன் €3 பில்லியன் பெறுமதியுள்ள ஒப்பந்தம்!

1 பங்குனி 2024 வெள்ளி 09:12 | பார்வைகள் : 3616


பிரெஞ்சு மின்சாரவாரியத்துடன் €3 பில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. 

கால்நிலை மாற்றத்துக்கு ஏதுவாக மின் வழங்கலில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இலத்திரனியல் மகிழுந்துகளுக்கு மின்னேற்றும் நிலையங்கள் அமைத்தல், மின் வழங்கலில் ஏற்படும் தடையை தவிர்த்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இருந்து 2050 ஆம் ஆண்டு வரையான 25 ஆண்டுகளுக்கான தொகையாக இந்த €3 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

'அதிகளவான மின்னேற்றி நிலையங்களை அமைத்தல், சோலார் மின்சார உற்பத்தியினை தேசிய மின்சாரசபையுடன் இணைத்தல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் இதில் உள்ளடங்குகின்றன' என மின்சார வழங்குனர்களின் தலைமை இயக்குனர் Marianne Laigneau தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்