Paristamil Navigation Paristamil advert login

மொசாம்பிக் கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து- 90 பேர் பலி

மொசாம்பிக் கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து- 90 பேர் பலி

9 சித்திரை 2024 செவ்வாய் 12:32 | பார்வைகள் : 2368


தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு மொசாம்பிக் குடியரசு. மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில் தற்காலிக படகு ஒன்று மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மீன்பிடி படகு ஒன்றில் சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நெருங்கியபோது படம் மூழ்கியுள்ளது.

இதுகுறித்து நம்புலாவின் மாநிலச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ கூறுகையில்," படகில் அதிகம் பேர் பயணித்ததாலும், படகும் அதிகம் பேர் ஏற்றிச் செல்லக்கூட நிலையில் இல்லை என்பதாலும் படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலியானவர்களில் பல குழந்தைகளும் உள்ளடங்குவர். சம்பவ இடத்தில் இருந்து 5 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், பலரை தேடி வருகின்றனர். கடல் சீற்றம் காரணமாக தேடும் பணி கடினமாக உள்ளது.

காலரா பற்றிய தவறான தகவல் பரவியதை அடுத்து, அதனால் ஏற்பட்ட பீதியின் காரணமாக பெரும்பாலான பயணிகள் படகு மூலம் தப்பிக்க முயன்றனர்" என்றார்.

படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்