Paristamil Navigation Paristamil advert login

வெள்ளம், புயல் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வெள்ளம், புயல் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

9 சித்திரை 2024 செவ்வாய் 12:55 | பார்வைகள் : 2926


வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை அவதானிப்பாளர்களான Météo France தெரிவித்ததன்படி, Eure மற்றும் Seine-Maritime ஆகிய இரு மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கையும், Pas-de-Calais மற்றும் Somme ஆகிய இரு மாவட்டங்களிலும் 120 கி.மீ வரை புயல் வீசும் எனவும், கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள Eure மற்றும் Seine-Maritime மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அங்குள்ள ஆறு மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்