Paristamil Navigation Paristamil advert login

நாளைய உதைபந்தாட்டப் போட்டி - இஸ்லாமிய தீவிரவாதிகள் எச்சரிக்கை!

நாளைய உதைபந்தாட்டப் போட்டி - இஸ்லாமிய தீவிரவாதிகள் எச்சரிக்கை!

9 சித்திரை 2024 செவ்வாய் 19:11 | பார்வைகள் : 4570


நாளை நடைபெற உள்ள லீக் இடையிலான (LIGUE DES CHAMPIONS) முக்கிய பெரும் எதிர்பார்ப்புடனான உதைபந்தாட்டப் போட்டி,  பரிஸ் சன் ஜேர்மன் எனப்படும் PSG அணிக்கும், பர்சிலோனா (பார்சா) அணிக்கும் இடையில் நடைபெற உள்ளது.

இது பரிசினின் பார்க் தே பிரன்ஸ் ( Parc des Princes) இல் நிகழ இருக்கும் நிலையில், இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளான தயேஸ் தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரான்சின் உள்ளகப் புலனாய்வுத் துறையான DGSI மற்றும் நட்பு நாடுகளின் புலனாய்வுத் தகவல்கள் இந்தத் தாக்குதல் எச்சரிக்கையினை வழங்கியிருக்கும் நிலையில், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனன் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்