Paristamil Navigation Paristamil advert login

சென்னை என் மனதை வென்றது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னை என் மனதை வென்றது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

10 சித்திரை 2024 புதன் 02:24 | பார்வைகள் : 1626


சென்னையில்  நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அது குறித்து எக்ஸ் தளத்தில் சென்னை என் மனதை வென்றது என குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளம் போன்ற பேரிடர்களில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய முன்னுரிமை.

பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம்.

உலக அரங்கில் தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் பிரபலப்படுத்துவோம்.

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

எழும்பூர் ரயில் நிலையம் உட்பட இங்குள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.

சென்னை என் மனதை வென்றது: இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோடு ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.

சென்னையின் உற்சாகம், தமிழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதையும் காட்டுகிறது. இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளார் பிரதமர் மோடி.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்