Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவன்-  பெற்றோருக்கு 10 ஆண்டு சிறை

 அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவன்-  பெற்றோருக்கு 10 ஆண்டு சிறை

11 சித்திரை 2024 வியாழன் 04:58 | பார்வைகள் : 2036


அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியில் நவம்பர் 30, 2021 அன்று, ஈதன் கிரம்பிள் என்ற 15 வயது மாணவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 4 மாணவர்கள் உயிரிழந்ததில் தற்போது 17 வயதாகும் ஈதன் கிரம்பிள் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈதனின் தந்தை ஜேம்ஸ் க்ரம்ப்ளே மற்றும் தாய் ஜெனிபர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

ஈதன் தன் மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும், அவர்களின் அலட்சியத்தால், ஈதன் துப்பாக்கியால் சுட்டதாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது.

விசாரணையின் போது அவர்கள் வீட்டில் புதிதாக வாங்கிய துப்பாக்கியைப் பாதுகாக்கத் தவறியதாகவும், தங்கள் மகனின் மனநலம் மோசமடைந்ததற்கான அறிகுறிகளைப் புறக்கணித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் மாணவர் ஈதன் தனது வீட்டுப்பாடத்தை துப்பாக்கி, தோட்டா மூலம் செய்து வருகிறார். 

காயமடைந்த நபரின் படங்களை வரைந்தார்.

இதையும் பெற்றோர் கவனிக்கத் தவறியதாக கூறப்படுகிறது. 

இந்த வழக்கில் ஜேம்ஸ் க்ரம்பிள் மற்றும் ஜெனிஃபர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

துப்பாக்கிச் சூட்டைத் தடுக்கும் வாய்ப்புகளைத் தவறவிட்டதாக நீதிபதி கூறினார். 

அமெரிக்காவில் முதல்முறையாக துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாணவியின் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்