Paristamil Navigation Paristamil advert login

பாடசாலை கழிவறையில் இருந்து 15 வயது மாணவனின் சடலம் மீட்பு!

பாடசாலை கழிவறையில் இருந்து 15 வயது மாணவனின் சடலம் மீட்பு!

11 சித்திரை 2024 வியாழன் 09:00 | பார்வைகள் : 3543


பாடசாலைக் கழிவறையில் இருந்து மாணவன் ஒருவனது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். Reims (Marne) நகரில் உள்ள Saint-Jean-Baptiste-de-la-Salle எனும் உயர்கல்வி பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி அளவில் மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்திலேயே சிறுவன் குறித்த பாடசாலையில் இணைந்திருந்தான். கடந்த சில நாட்களாக அவன் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் பாடசாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அங்கு உளநல சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்