Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான் மசூதியில் ஸதீ விபத்து...! ஒருவர் பலி

 பாகிஸ்தான் மசூதியில் ஸதீ விபத்து...! ஒருவர் பலி

11 சித்திரை 2024 வியாழன் 10:07 | பார்வைகள் : 4822


பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் உள்ள மசூதியில் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 5 போலீஸ்காரர்கள் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் மசூதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள், தொழுகை நடைபெற்றபோது தங்களுக்கு தேநீர் தயாரித்தபோது சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதாக உயர் போலீஸ்  அதிகாரி தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்