Paristamil Navigation Paristamil advert login

RCB அணியில் விளையாடப் போவது இல்லை என அறிவித்த பிரபல வீரர்

RCB அணியில் விளையாடப் போவது இல்லை என அறிவித்த பிரபல வீரர்

16 சித்திரை 2024 செவ்வாய் 07:50 | பார்வைகள் : 830


கிளென் மேக்ஸ்வெல் எஞ்சிய சில போட்டிகளில் விளையாடப் போவதில்லை என அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியடைந்ததால் ஏறக்குறைய அந்த அணியின் ஐபிஎல் கனவு தகர்ந்துவிட்டது.

அணியில் இடம்பெற்றிருந்த கிளென் மேக்ஸ்வெல் தொடர்ச்சியாக சொதப்பி வந்த நிலையில், நேற்றைய தினம் 15.04.2024 போட்டியில் அவர் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கிளென் மேக்ஸ்வெல், ''மன ரீதியாகவும், உடலில் இடத்திலும் தற்போது நல்ல நிலையில் இல்லை. 

எனவே, ஓய்வு எடுக்க முடிவு செய்தேன். 

என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் இது மிகவும் எளிதான முடிவு. 

கடைசி ஆட்டத்திற்கு பிறகு நான் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் பயிற்சியாளர்களிடம் சென்றேன். நாங்கள் வேறு யாரையாவது முயற்சித்தோம் என்று நான் உணர்ந்தேன்.

கடந்த காலங்களில் நான் இந்த சூழ்நிலையில் இருந்தேன். அங்கு நீங்கள் விளையாடிக் கொண்டே இருக்க முடியும். 

நான் மனதளவில் மற்றும் உடல் ரீதியாக கொஞ்சம் ஓய்வெடுத்து, என் உடலை சரிசெய்துகொள்ள இது ஒரு நல்ல நேரம் என்று நினைக்கிறேன்.

போட்டியின்போது நான் நுழைய வேண்டியிருந்தால், நான் இன்னும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திடமான மன மற்றும் உடல் இடத்திற்கு திரும்ப முடியும்'' என தெரிவித்தார்.

மேக்ஸ்வெலின் இந்த முடிவு, ஏறக்குறைய தொடரை விட்டு வெளியேறிவிட்ட நிலையில் RCB அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்