Paristamil Navigation Paristamil advert login

ஜுன் 1 இற்கு முதல் விலாசங்கள் பதிவு செய்யப்படல் வேண்டும்!!

ஜுன் 1 இற்கு முதல் விலாசங்கள் பதிவு செய்யப்படல் வேண்டும்!!

20 சித்திரை 2024 சனி 18:28 | பார்வைகள் : 4372


பிரான்சின் பல கிராமங்களிற்கு பிரெஞ்சு அரசாங்கம் போட்டிருக்கும் சட்டம் எரிச்சலை உருவாக்கி உள்ளது.

பிரான்சின் பல சிறு கிராமங்களில், பல வீதிகளிற்குப் பெயர் என்பதே இல்லை. அங்கு வசிப்பவர்களின் வீடுகள் தபால் விநியோகஸ்தர்களிற்கு தெரிந்துள்ளமையால் இதுவரை சிக்கல்கள் இல்லாமல் இருந்துள்ளது.

ஆனால் ஜுன் முதலாம் திகதிக்கு முன்னதாக 2000 குடும்பங்களிற்கு குறைவாக உள்ள அனைத்துக் கிராமத்தவர்களும், தங்களது விலாசங்களை தேசிய விலாச தரவில் பதிவு செய்யப்படல் வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை ஒவ்வொரு நகரசபைகளிடமும் அரசு வழங்கி உள்ளது. கடிதம், பொதி விநியோகம் மற்றும் இணையசேவை வழங்கல் போன்றவற்றில் உள்ள சிக்கலினாலேயே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால்  இந்தப் பிரச்சினையில் பல வீதிகளிற்கு ஒரே பெயர் வரும் சிக்கல்களும் எழுந்துள்ளன. இதனால் பல குழப்பங்கள் விளையும் எனவும் நகரசபைகள் எச்சரித்துள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்