Paristamil Navigation Paristamil advert login

சாகச விளையாட்டுப் பூங்காவில் பெண் பலி!!

சாகச விளையாட்டுப் பூங்காவில் பெண் பலி!!

21 சித்திரை 2024 ஞாயிறு 15:00 | பார்வைகள் : 2768


சாகச விளையாட்டுப் பூங்காவான fête foraine இல் ஒரு சாசச விளையாடடிலிருந்து தூக்கியெறியப்பட்ட 27 வயடைய பெண் சாவடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 23h00 மணியளவில் புலுவா (Blois - Loir-et-Che) நகரில் நடந்துள்ளது.

இந்த சாகச விளையாட்டில் இருந்து தூக்கியெறியப்பட்ட பெண் படுகாயமுற்ற நிலையில், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு அவர் சாவடைந்துள்ளார் என்பதனை புலுவா நகரபிதா தெரிவித்துள்ளார்.

கடந்த 30 மார்ச் திறக்கப்பட இந்த சாகச விளையாட்டுப் பூங்கா இன்று 21 ஏப்ரல் வரை திறக்ககப்பட இருந்தது. நேற்றைய விபத்தின் பினனர் இது உடனடியாக மூடப்பட்டுள்ளது.
 
காவற்துறையினரின் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்