Paristamil Navigation Paristamil advert login

யாழில் யாழில் வைத்தியசாலை பணியாளர் மீது தாக்குதல்

யாழில் யாழில் வைத்தியசாலை பணியாளர் மீது தாக்குதல்

1 சித்திரை 2024 திங்கள் 05:46 | பார்வைகள் : 1784


யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் இறங்குதுறையில் வைத்து, புங்குடுதீவு வைத்தியசாலை பணியாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நயினாதீவில் வசிக்கும் குறித்த பணியாளார் நேற்று ஞாயிற்றுக்கிழமை , நயினாதீவில் இருந்து, படகில் குறிகட்டுவான் இறங்குதுறையில் வந்து இறங்கிய வேளை, அங்கு காத்திருந்த இருவர் அவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கடற்படையினர் , பொதுமக்கள் பார்த்திருக்க இருவரும் பணியாளர் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பணியாளர் சிகிச்சைக்காக யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்